17.09.2009 அன்று குழந்தை இயேசு நவநாள் ஜெபம் துவங்கப்பட்டது சிறப்பாக நவநாள் ஜெபத்தின் வழிபாட்டு முறை மற்றும் அதன் ஆசிர் பெறுவது பற்றி விவரிக்கப்பட்டது.அன்று முதல் நவநாள் ஜெப வழிபாடு தொடர்ந்து நடைபெறுகிறது.
01.07.2012 அன்று ஞாயிறு மாலை 6.௦௦ மணிக்கு மேதகு. ஆயர் அந்தோனி டிவோட்டா அவர்கள் தலைமையில் மறைமாவட்ட முதன்மை குரு பேரருட்திரு.தாமஸ் பால்சாமி முன்னிலையில் மக்கள் கூட்டத்தில் ஆலய அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
03.02.2013 அன்று முதல் குழந்தை இயேசு ஆலய தேர் திருவிழா சிறப்பாக துவங்கப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு வருடமும் தேர் பவனி திருவிழா சிறப்பான முறையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.